போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
எழுத்தாளரும், சினிமாவில் பல படங்களுக்கு வசனகர்த்தாவாகவும், இயக்குநராகவும் பணியாற்றிய பாலகுமாரன், சில தினங்களுக்கு முன்னர் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ரஜினி, சிவகுமார், நாசர் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
கமல், அரசியல் சுற்று பயணத்தில் இருந்ததால் அஞ்சலி செலுத்த வரவில்லை. இந்நிலையில் பாலகுமாரன் இல்லத்திற்கு சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார் கமல்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், சினிமாவிற்கு முன்பே பாலகுமாரனை எனக்கு தெரியும். சினிமாவிற்கு அவர் வர வேண்டும் என விரும்பியவன் நான். நவயுக சினிமாவை பற்றி நிறையே பேசியிருக்கிறோம். தமிழ் சினிமாவை எப்படி மாற்றலாம் என பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
அற்புதமான எழுத்தாளர், நெருப்பு போன்று எழுதுபவர். நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு கதை எழுதினோம். நன்றாக வாழ்ந்து சென்றிருக்கிறார். தமிழுக்கு அவர் கொடுத்து சென்ற பரிசுக்கு நன்றி.
இவ்வாறு கமல் கூறினார்.